கல் யானைக்கு கரும்பு தந்த படலம்
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கல் யானைக்கு கரும்பு தந்த படலம் நூலின் இருபத்திவொன்றாதாவது படலமாகும்.
சிவபெருமானின் அருளைப் பெற்று இவ்வுலக ஆசையைத் துறந்தவர்கள் யாரிடம் ஏதேனும் பொருட்களை விரும்பி அவர்களை நாடி செல்ல மாட்டார்கள் ஆகவே அந்த சித்தர் என்னை நாடிவர எந்த ஒரு காரணமும் இருக்கவில்லை. ஆகையால் நானே அவரைப் பார்க்க வருகிறேன் என்று சொல்லி சொக்கநாதரை வழிபட வேண்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றான். அரசனின் வருகையை அறிந்த சித்தர் அவர் செல்லும் வழியாகிய கோவிலின் வடமேற்கு திசையில் சென்று அமர்ந்திருந்தார். அபிடேகபாண்டியன் சொக்கநாதரை வழிபட்டு கோவிலை வலம் வந்த போது பாண்டியனின் மெய்காவலன் முன்னதாகச் சென்று சித்தரிடம் அரசர் வரும் நேரம் ஆகையால் நீங்கள் இந்த இடத்தை விட்டுச் செல்லுங்கள் என்று கூறினான். அவர் அசையாமல் அமர்ந்திருந்தார். அங்கு வந்த அபிடேகபாண்டியன் சித்தரிடம் சித்தரே தாங்கள் யார்? தங்களது ஊரும் நாடும் எது? நீங்கள் எதனை எதிர்பார்த்து இங்கு வந்து உங்களின் சித்து வேலைகளை மதுரை மக்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? என்னால் உங்களுக்கு ஆகவேண்டியது ஏதும் உள்ளதா? என்று கேட்டான்.
சித்தர் சிரித்துக் கொண்டே அப்பா எல்லா நாட்டிலும் எல்லா ஊரிலும் நாம் திரிவோம். நான் தற்போது காசியை சொந்த ஊராகக் கொண்டுள்ளேன். எதிலும் பற்று இல்லாமல் பிச்சை எடுத்து வாழும் அடியவர்களே என்னுடைய உறவினர்கள். நாம் எந்நாளும் வித்தைகள் செய்கின்ற சித்தராவோம். தில்லைவனம் உள்ளிட்ட சிவதலங்களை வணங்க வந்தோம். இம்மையில் வளமான வாழ்கையையும் மறுமையில் வீடுபேற்றினை அளிக்கும் மதுரையம்பதியில் தற்போது தங்கியுள்ளேன். உன்நாட்டு மக்கள் என்னிடம் என்ன கேட்கிறார்களோ அதை தருவது போல் உனக்கும் நீ வேண்டியதைக் கொடுக்கிறேன். அறுபத்திநான்கு கலைகளிலும் நாம் நன்கு தேர்ச்சியுடையோம். விண்ணுலகத்தில் உள்ளவற்றை மண்ணுலகத்திற்கு கொண்டு வரும் ஆற்றலை உடையவன். பாண்டியனே உன்னிடத்தில் நாம் பெறத்தக்கது ஒன்றும் இல்லை என்று கூறி புன்னகைத்தார்.
சித்தரின் வார்த்தைகளைக் கேட்ட அபிடேகபாண்டியன் அதிர்ச்சி அடைந்து இவருடைய செருக்கு பெருமிதம் இறுமாப்பு உள்ளது போல் இருக்கிறது. ஆகவே இவரை கண்டிப்பாக சோதித்து அறிய வேண்டும் என்று எண்ணினான். அப்போது அங்கே ஒரு உழவன் செங்கரும்பினைக் கொண்டு வந்து அரசனை வணங்கினான். அபிடேகபாண்டியன் அக்கரும்பினைப் பெற்றுக் கொண்டு இந்த உலகத்தில் உங்களால் இயலாதது ஒன்றும் இல்லை என்று சொன்னீர்கள். இங்கு நிற்கும் இந்த கல்யானைக்கு இந்த கரும்பினைக் கொடுத்து அதனை சாப்பிடச் செய்தால் வல்லமை பெற்ற சித்தர் நீங்களே என்றும் இங்கு குடிகொண்டிருக்கும் சொக்கநாதரும் நீங்களே என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் நீங்கள் விரும்பிதை அளிப்பேன் என்று கூறினான்.
சித்தர் சிரித்துக் கொண்டே பாண்டியனே எமக்கு உன்னால் வரும் பயன் ஒன்றும் இல்லை. இருப்பினும் நீ கூறியபடி இந்த கல்யானை இப்பொழுதே இக்கருப்பினை கடித்து உண்பதைப் பார் என்று கூறி கல்யானையைப் பார்த்தார். சித்தரின் கண் அசைவினால் கல்யானை உயிர் பெற்று தன்னுடைய கண்களை உருட்டியது. வாயினைத் திறந்து கோவில் அதிரும்படி பிளிறியது. அபிடேகபாண்டியனின் கையிலிருந்த கரும்பினைப் பிடுங்கி கரும்புச்சாறு ஒழுகுமாறு கரும்பினை மென்று தின்றது. பின்னர் சித்தர் கல்யானையை மீண்டும் பார்த்தார். உடனே கல்யானை தன்னுடைய துதிக்கையால் பாண்டியன் அணிந்திருந்த முத்து மாலையை பிடுங்கியது. இதனைக் கண்ட மெய்காவலர்கள் யானை அடிக்க கம்பினை உயர்த்தினர். சித்தர் கோபம் கொண்டு மெய்க் காவலர்களைப் பார்த்தார். அதற்குள் கல்யானை முத்துமாலையை விழுங்கி விட்டது. இதனைக் கண்ட பாண்டியன் மிக்க கோபம் கொண்டான். உடனே மெய்க் காவலர்கள் சித்தரை அடிக்க நெருங்கினர். உடனே சித்தர் புன்னகையுடன் தன் கையை அங்கேயே நில்லுங்கள் என்பது போல் அவர்கள் முன் தன் கையை நீட்டினார். உடனே வீரர்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாமல் அப்படியே அசைவின்றி நின்றனர். இதனைக் கண்ட பாண்டியனுக்கு கோபம் மாறி பயம் உண்டாகியது. சித்தரின் காலில் விழுந்து வணங்கி அடியேனின் பிழையைப் பொறுத்தருளுங்கள் என்று கூறினான். அதற்கு சித்தர் பாண்டியனே உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்டான். அதற்கு அபிடேகபாண்டியன் புத்திரப் பேறு அருளுங்கள் என்று வேண்டினான். சித்தரும் அவ்வாறே ஆகட்டும் என்று அருள்புரிந்து கல்யானையின் மீது தன்னுடைய கடைக்கண் பார்வையைச் செலுத்தினார். உடனே யானை தனது துதிக்கையை நீட்டி பாண்டியனின் முத்துமாலையை திருப்பிக் கொடுத்தது.
பாண்டியனும் அதனை வாங்கி அணிந்து கொண்டான். அப்போது சித்தர் மறைந்து அருளினார். யானையும் மீண்டும் கல்யானையாகி அசைவற்று நின்றது. இறைவனின் திருவிளையாடலை எண்ணிய அபிடேகபாண்டியன் மீண்டும் சொக்கநாதரை வணங்கி அரண்மனை திரும்பினான். சித்தரின் திருவருளால் அபிடேகபாண்டியனுக்கு விக்ரமன் என்ற புதல்வன் பிறந்தான். விக்ரமன் வளர்ந்து பெரியவனானதும் அபிடேகபாண்டியன் விக்ரமனுக்கு அரசாட்சியை அளித்து இறைவனின் திருவடியை அடைந்தான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
இறைவனை தவறாக எண்ணி சோதித்தாலும் இறைவன் இறுதியில் தன் பக்கதர்களைக் காப்பான் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
Kal Yanaikku Karumbu Thandha Padalam (கல் யானைக்கு கரும்பு தந்த படலம்)
"Kal Yanaikku Karumbu Thandha Padalam" is the 21st chapter in the Thiruvilaiyadal Puranam.
This chapter translates to "The Chapter where Sugar cane was Given to the Stone Elephant." It is one of the most famous, entertaining, and visually iconic stories in the entire Puranam, showcasing Lord Shiva's playful mystic powers (Leela) and His way of humbling proud skeptics.
The Story
1. The Arrival of the Mysterious Yogi
During the reign of King Abisheka Pandiyan, a mysterious, charismatic, and extraordinary yogi arrived in the city of Madurai. Known simply as the "Ellam Valla Siddhar" (The All-Powerful Mystic—who was actually Lord Shiva in disguise), he wandered the streets performing incredible, unexplainable spiritual feats that left the citizens spellbound. Rumors of his supernatural abilities quickly spread throughout the capital.
2. The Royal Skepticism
When reports of this mystic reached the royal palace, King Abisheka Pandiyan grew curious yet skeptical. As a ruler, he had seen many tricksters and magicians claiming fake powers. Intrigued, the King sent his royal ministers to summon the Siddhar to his court so he could test him personally.
3. The Courtroom Challenge
When the Siddhar calmly entered the grand royal assembly, the King looked at him with an air of doubt and said, "People claim you possess great divine powers. If that is true, demonstrate something miraculous right here in my court to prove your authenticity!"
4. The Stone Elephant and the Sugarcane
At that very time, royal sculptors were carving a massive, heavy, and completely lifeless stone statue of an elephant near the palace premises. Pointing toward the massive rock sculpture, the King mockingly challenged the mystic: "If you are truly a powerful Siddhar, make this dead stone elephant come alive, walk up here, and eat a fresh stalk of sugarcane!"
5. The Miracle
The Siddhar smiled gently at the King's challenge, showing no sign of annoyance. He picked up a thick, fresh stalk of sugarcane, walked over to the massive stone sculpture, and gently touched it with his hand while uttering a divine command.
Instantly, a breathtaking miracle occurred. The cold, inanimate rock sprang to life! The stone elephant blinked its eyes, let out a loud, resonant trumpeting sound, stretched out its trunk, snatched the sugarcane from the mystic's hands, crushed it with its powerful jaws, and happily ate it—leaving the King, his ministers, and the entire court struck dumb with shock and terror.
6. The Pearl Necklace and the Freeze
Having finished the sugarcane, the living elephant turned its trunk toward the stunned King, playfully reached out, and grabbed the valuable pearl necklace right off the King's neck, swallowing it instantly!
Panicked that his royal jewelry had just been eaten by a miraculous beast, the King shouted out orders for his guards to capture the Siddhar. But the moment the guards rushed forward, the Siddhar immobilized them in their tracks, freezing them like statues where they stood.
7. The King's Surrender
Realizing that he was dealing with none other than the Supreme Lord Himself disguised as a mystic, King Abisheka Pandiyan panicked completely. He rushed down from his throne, fell flat on the floor in absolute prostration, and begged for forgiveness.
Pleased by the King's sincere repentance, the Siddhar restored the frozen guards, made the elephant return to its original stone form (leaving the pearl necklace safely accessible), and blessed the King before gracefully disappearing into thin air.
Significance and Legacy
-
The Illusion of Life: This chapter highlights the profound philosophical truth that creation, life, and matter are entirely under the control of the Divine. What appears to human eyes as dead, unyielding stone can instantly become living reality through divine will.
-
Humbling Earthly Pride: It serves as a classic reminder that temporal power (a king on a throne) is nothing compared to spiritual truth, and challenging the Divine out of ego always leads to a humbling realization.
No comments yet. Be the first to share your thoughts!