யானை எய்த படலம்
சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் யானை எய்த படலம் நூலின் இருபத்தியிரண்டாவது படலமாகும்.
அபிடேகப்பாண்டியனின் மகனான விக்கிரமபாண்டியன் பாண்டிய நாட்டினை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய ஆட்சியில் சைவம் செழித்தோங்கி இருந்தது. அவன் சொக்கநாதரின் சந்நிதிக்கு வடக்கே சித்தரின் திருவுருவத்தை நிறுத்தி நள்தோறும் வழிபட்டு வந்தான். இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கநாதருக்கு அருகே எல்லாம் வல்ல சித்தரை நாம் தரிசிக்கலாம்.
விக்கிரமபாண்டியனிடம் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசன் ஒருவன் நீண்ட நாள் பகைமை கொண்டிருந்தான். அவனுக்குப் பாண்டியன் பேரில் ஏகப்பட்ட பொறாமை. அவனை எப்படி வெல்வது என்பதே அவன் மூளையைக் குழப்பியது. சமண சமயத்தை தழுவிய அவ்வரசன் விக்ரமபாண்டியனை நேரடியாக போரிட்டு வெல்ல இயலாததால் விக்கிரமபாண்டியனை சூழ்ச்சியால் வெல்ல எண்ணினான். அதன்படி சக்கியம் கோவர்த்தனம் கிரௌஞ்சம் திரிகூடம் அஞ்சனம் விந்தியம் ஹேமகூடம் காஞ்சி குஞ்சரம் என்ற எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தன்னை வந்து சந்திக்குமாறு தனித்தனியாக கடிதம் அனுப்பினார். அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னன் தலையை மயில் தோகையால் தொட்டு வாழ்த்தினர். பாண்டிய நாட்டை வெற்றி பெற விரும்புகிறேன். விக்கிரம பாண்டியனைப் போரில் வெல்லமுடியாது. அபிசார வேள்வியை (மரண வேள்வி) செய்து விக்கிரமனை வீழ்த்த வேண்டும். அவனை அழித்தால் உங்களுக்கு பாதி இராஜ்ஜியம் தருகிறேன் எனவும் ஆசை காட்டினான். சோழனின் உடன்படிக்கு ஒத்துக் கொண்ட சமணர்கள் பாலியாற்றங்கரையில் பெரிய யாக குண்டத்தை அமைத்தனர். அதில் எட்டி உள்ளிட்ட தீய மரத்தின் விறகுகளையும் நச்சு உயிரிகளின் உடம்பு மிளகுப்பொடி கலந்த எண்ணெயையும் ஊற்றி அபிசார வேள்வியைத் தொடங்கினர். அவ்வேள்வித் தீயினால் உண்டான நச்சானது அருகில் இருந்த காடுகள் சோலைகள் நந்தவனம் ஆகியவற்றை கருக்கி விட்டன.
சமணர்களின் அபிசார வேள்வித் தீயிலிருந்து ஒரு கொடிய யானை ஒன்று தோன்றியது. சமணர்கள் கொடிய யானையிடம் நீ விரைந்து சென்று விக்கிரம பாண்டியனையும் மதுரையையும் அழித்து விட்டு வா என்று கட்டளையிட்டனர். யானையின் உடலானது பெருத்தும் அதனுடைய கால்கள் மண்ணில் பதிந்தும் உடலானது விண்ணைத் தொட்டும் இருந்தது. அது தன்னுடைய பெரிய காதுகளினால் சூறாவளியை உருவாக்கியும் கண்களில் நெருப்புப் பொறி சிந்தவும் உலகத்தினை உலுக்கும் இடிபோல் பிளிறிக் கொண்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டது. சமணர்களும் சோழனுடைய படைகளும் யானையைப் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் மதுரையின் எல்லையை அடைந்த கொடிய யானை அங்கிருந்த காடுகள் வயல் வெளிகள் உயிரினங்கள் உள்ளிட்ட கண்ணில் பட்டவற்றை எல்லாம் அடித்து நாசமாக்கியது. யானையின் செயலை மதுரை மக்கள் விக்கிர பாண்டியனுக்குத் தெரிவித்தனர். கொடிய யானையின் செயல்களை அறிந்த விக்கிரம பாண்டியன் சொக்கநாதரைத் தவிர்த்து இவ்வுலகத்தில் இருந்து நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். ஆதலால் வாருங்கள் நாம் அனைவரும் சென்று அவரை வழிபாடு செய்வோம் என்று கூறி மதுரை மக்களுடன் சொக்கநாதரை தரிசிக்கச் சென்றான்.
சொக்கநாதரின் சந்நிதியை அடைந்த விக்கிரபாண்டியன் கொடிய யானை மதுரையின் எல்லையில் நின்று கண்ணில் பட்டவற்றை நாசம் செய்தவாறே மதுரையை நோக்கி வருகிறது. இறைவா எங்களை இத்துன்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என்று மனமுருகி வழிபட்டான். அப்போது வானத்தில் இருந்து பாண்டியனே கவலைப்பட வேண்டாம். யாம் வேடுவர் வேடம் பூண்டு வில் ஏந்திய சேவகனாய் மதுரையை அழிக்க வந்த கொடிய யானையை அழிப்போம். நீ அதற்கு முன்பு மதுரைக்கு கிழக்கே ஓர் அட்டாலை மண்டபத்தை உண்டாக்கு என்ற திருவாக்கு கேட்டது. இறைவனின் திருவாக்கினைக் கேட்ட விக்கிரமபாண்டியன் மனதில் மகிழ்ச்சி கொண்டு மதுரையின் கீழ்திசை நோக்கி ஓடினான். கற்களையும் சாந்தினையும் கொண்டு பதினாறு கால் தூண்களுடன் கூடிய பெரிய அட்டாலை மண்டபத்தை உண்டாக்கினான். அதன் மேல் இரத்தினத்தினால் இழைத்த தங்க பீடத்தை நிறுவினான். பீடத்தின் மேல் சொக்கநாதர் சிவப்பு ஆடையைக் கட்டிக் கொண்டு தலையில் மயில் தோகை அணிந்து அம்புக்கூட்டினை முகிலே கட்டி பச்சை நிற மேனியராய் தோன்றினார். சிறிது நேரத்தில் கொடிய யானையானது அவ்விடத்திற்கு வந்தது. தமது வில்லை எடுத்து நாணினைப் பூட்டி வளைத்தார். பின் வில்லில் நரசிங்கக் கணையை வைத்து நாணினை இழுத்து விட்டார். அக்கணையானது யானையின் மத்தகத்தைக் கிழித்தது. கொடிய யானை நரசிங்க கணையின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. யானை மடிந்ததைக் கண்ட சமணர்கள் மிகுந்த மனவருத்தம் கொண்டனர்.
இறைவனின் திருக்கையால் யானை மடிந்ததைக் கண்ட விக்கிரமபாண்டியன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். யானையின் பின்னால் வந்த சமணர்களையும் சோழனின் படைகளையும் பாண்டியனின் படைகள் அடித்து துரத்தினர். வேடுவ வடிவம் கொண்டு வந்த சொக்கநாதரின் திருவடிகளில் வீழ்ந்த விக்கிரமபாண்டியன் எங்களைக் காத்த இறைவரே தாங்கள் இத்திருக்கோலத்திலேயே இங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்று விண்ணபித்தான். இறைவனாரும் அவனுடைய வேண்டுகோளை ஏற்று அருளினார். மேலும் புத்திரப்பேறு கிடைக்கவும் அருளினார். சொக்கநாதரின் அருளால் விக்கிரமபாண்டியன் இராஜசேகரன் என்னும் புதல்வனைப் பெற்று பாண்டிய நாட்டில் நல்லாட்சி நடத்தினான். மதுரையை அழிக்க வந்த யானையானது சொக்கநாதரின் பாணம் பட்டு தரையில் வீழ்ந்த இடத்தில் மலையாக மாறியது. இதுவே யானை மலை ஆகும். இது பார்ப்பதற்கு யானை படுத்திருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். இது மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும். சொக்கநாநர் யானையின் மீது விடுத்த நரசிங்கக்கணையானது உக்கிர நரசிங்க மூர்த்தியாக மலையின் அடிவாரத்தில் தோன்றினார். இந்த நரசிங்கமூர்த்தியை உரோமச முனிவர் வழிபாடு நடத்தி தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். பிரகலாதனும் இவ்விடத்திற்கு வந்து தவம் செய்து சித்தி பெற்றான்.
சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:
மதுரையில் இருக்கும் நரசிங்க மூர்த்தி கோயிலை உலக நன்மைக்காக கொடுத்ததும் யானை மலை உருவாகிய விதமும் வஞ்சகர்களின் சூழ்ச்சி இறுதியில் இறைவனின் கருணையால் வீழ்த்தப்படும் என்பதேயும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.
Yaanai Eytha Padalam (யானை எய்த படலம்)
"Yaanai Eytha Padalam" is the 24th chapter in the Thiruvilaiyadal Puranam.
This chapter translates to "The Chapter where the Elephant Arrow was Shot." It is a dramatic story that blends epic Tamil literature, a royal debate, and a fierce archery test to defend the honor of a devotee poet.
The Story
1. The Arrogant Jains and the Literary Challenge
During the reign of the Pandyan King, a group of rival scholars and ascetics (traditionally depicted as Jains) arrived in Madurai. Puffed up by their intellectual pride and mastery over debate, they sought to undermine the supremacy of Tamil literature associated with the Meenakshi Sundareswarar Temple. They challenged the local scholars and poets to a high-stakes debate, demanding that whoever lost should abandon their faith and convert.
2. The Humble Devotee Poet: Tharuma Sivar
The local scholars were deeply worried, as the visitors were exceptionally aggressive and skilled in debate. Among the temple devotees was a humble, pious poet named Tharuma Sivar (or Tharumar). Though he was a pure devotee of Lord Shiva, he was not a fierce debater and felt entirely unequipped to face the arrogant scholars.
Heartbroken, Tharuma Sivar went to the sanctum, fell at the feet of Lord Somasundarar, and wept, saying, "If these challengers defeat us, Your holy fame and the honor of Tamil will be tarnished. I have no one else to protect me."
3. The Divine Poem
Moved by his pure devotion, Lord Shiva decided to take matters into His own hands. That night, the Lord appeared in a dream to Tharuma Sivar and recited a breathtaking, flawless Tamil poem containing deep philosophical truths about the Supreme. The Lord instructed the poet to present this exact verse in the royal court the next day.
4. The Disputed Verse
The next morning, Tharuma Sivar stood before the royal court and recited the divine verse. The arrogant visiting scholars were stunned. The poem was so profound, grammatically flawless, and intellectually bulletproof that they could not find a single flaw in it.
However, driven by ego and jealousy, they refused to accept its brilliance. They raised absurd objections, falsely claiming that the grammar of the poem was flawed and that its meaning was illogical, attempting to cheat their way to a "win."
5. The Lord Steps In
Seeing the dishonesty of the challengers, Lord Shiva could no longer tolerate the slander against His divine verse. Suddenly, an ethereal voice (Asariri) boomed from the skies above the court, fiercely defending the poem and proving its absolute grammatical perfection.
When the arrogant scholars still stubbornly argued against the voice, Lord Shiva—taking the form of a majestic archer—manifested a celestial weapon known as the Yanaasthiram (the Elephant Arrow).
6. The Destruction of Arrogance
With a blinding flash of divine energy, the arrow struck with the crushing force of a wild elephant, completely shattering the arrogance and arguments of the rival scholars. Humbled and terrified by the raw display of divine power, the challengers dropped their opposition, acknowledged the supremacy of the Lord's poem, and embraced the path of devotion.
No comments yet. Be the first to share your thoughts!